Thursday, June 18, 2009

தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கும் போது நான் யுகம் தோறும் அவதரிப்பேன்



தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கும் போது நான் யுகம் தோறும் அவதரிப்பேன் என்றான் கண்ணன்...... ஆமாங்க கண்ணன் மீண்டும் "வராக" மைந்தனாக அவதரித்து விட்டான். இம்முறை காப்பதற்கு அல்ல அழிப்பதற்கு. ஸ்வைன் ஃபுளூ என்னும் திரு நாமத்துடன் அவதரித்து விட்டான். துனிலும் இருப்பவன் துரும்பிலும் இருப்பவன் இன்று உலகெங்கும் அவதரித்து விட்டான். எவ் எவ் நாடுகள் அதர்மத்திற்கு ( தமிழனுக்கு எதிராக ) துணைபோனதோ அங்அங்கே எல்லாம் அவதரித்து விட்டான். சரி நாம் விடயத்திற்கு வருவோம்.

ஸ்வைன் ப்ளூஎன்றால் என்ன ?இது பன்றிகளில் இருந்து மனிதனுக்குப் பரவுவதால் பன்றிக் காய்ச்சல் ( அதுதானுங்க பன்றிக்கு ஸ்வைன் என்ற பெயரும் இருக்கின்றாங்க ) எனப்படுகின்றது. விசேசம் என்னண்டா உருமாறும் திறன் கொண்ட ஆர்என்ஏ ஜீன்களின் அடிப்படையில் உருவான வைரஸ் மூலம் பரவும் நோய்தான் இந்த ஸ்வைன் ஃப்ளூ. ரிபோ நியூக்ளிக் ஆசிட் எனப்படும் ஆர்என்ஏவை (டிஎன்ஏ மாதிரி) தனது ஜெனிட்டிக் மெட்டீரியலாக (ஜீன்) கொண்ட வைரஸ்கள் உருவாக்கும் நோய்கள் தான் இந்த பன்றிக்காச்சல். ஸ்வைன் ப்ளூவுக்கு காரணமான H1N1 வைரஸ்இரண்டுபுரோதங்களால் ஆனது. அவற்றில் ஒன்று H எனப்படும் ஹேமக்குளேட்டனின் மற்றொன்று N எனப்படும்நியூராமினிடேஸ் என்ற புரதமாகும். அந்தவைரசின் பெயரில்இருக்கும் எண்கள் அதன்வகையை குறிக்கிறது. இந்த வைரசின் D N A சோதனையிட்டதில் வட அமெரிக்க பன்றிகளில் காணப்படும் வைரசில் உள்ள சில ரசாயனங்களும், அதே நேரத்தில் ஐரோப்பிய பன்றிகளில் காணப்படும் வைரசின் சில வேதிப் பொருட்களும் இருப்பது தெரியவந்துள்ளது. ஆக இந்த வைரஸ் ஐரோப்பாவிலிருந்து தான் மெக்சிகோ-வட அமெரிக்காவுக்கு வந்திருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் எவ்வாறு ஐரோப்பாவிலிருந்து வட அமெரிக்காவுக்கு வந்தது என்ற கேள்விக்கு விடை தேட முனைகையில் விசா இல்லாமல் கண்டங்கள் தாவும் பறவைகள் தான் இங்கு காவிகளாக செயல்பட்டுள்ளன. பன்றிகளுக்குள் நுழைந்துவிட்டால் அதன் சுவாசப் பாதையில் வலம் வரும் இந்த வைரஸ் முதலில் பன்றிகளைக் கொல்லும்.அனேகமாக ஒரு வைரஸ் மனிதனுக்குள் புகுந்துவிட்டால் அதை மனிதனின் தற்காப்பு சிஸ்டம் (Immune system) அழித்துவிடும். ஆனால், இந்த மியூட்டேசன் எனப்படும் உருமாறும் திறன் மூலம் மனிதனின் தற்காப்பு சிஸ்டத்தை வென்று விடுகிறது இந்த வைரஸ். இதன் காரணமாகத்தான் இவ் நுன்அங்கி இன்று பல்கிப்பெருக் வளர்ந்துள்ளது. இந்த வைரஸ் தாக்கினால் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, குளிர் காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி போன்றவை ஏற்படும். கவனிக்காமல் விட்டால் பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம். இந் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலகின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இறங்கியுள்ளன.உதாரணமாக இங்கிலாந்தின்ஹெர்ட்போர்டுஷையர்நகரில் இருக்கும் தேசியஉயிரியல் தரக்கட்டுபாடுநிறுவனத்தை சேர்ந்தவிஞ்ஞானிகள் தற்போதுஅதிவேகமாக ஆராய்ச்சிசெய்து வருகின்றனர். அவர்கள் இதற்காக எடுத்துக் கொன்டது முட்டையாகும். என்னது ஆச்சரியமாக இருக்கா? ஆம் அவர்கள் இவ் நுன் அங்கிகளை வளர்க்கும் ஒரு இடமாக இவ் முட்டையை பயன்படுத்துகின்றனர். அவர்கள் இவ் நுன் அங்கிகளை இரண்டு வகையாக பரிசோதிக்க உள்ளனர். இதற்கு அவர்கள் ரிவர்ஸ் ஜெனிட்டிக்ஸ் என பெயரிட்டுள்ளனர். இதில் H மற்றும் N புரோதங்களை தனியாக பிரித்து, அவற்றை PR8 என்ற வைரசின் உதவியுடன் மீண்டும் இணைக்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் நோய் தன்மையற்ற ஒட்டு வைரஸ்ஆல் மருந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். மற்றொரு முறையில் H1N1 மற்றும் PR8 இரண்டையும் ஒரே சமயத்தில் முட்டைக்குள் போட்டு, அவற்றை இயற்கை வழியில் ஜீன் மாற்றம் அடைய செய்து, அதன் மூலம் உருவாகும் புதிய ஒட்டு வைரசிலிருந்து மருந்து தயாரிக்க இருக்கின்றனர். ஆனால் இதை தயாரிக்க இன்னும் சில மாதங்கள் தேவைப்படலாம்....

Tuesday, June 16, 2009

உங்க முன்னால் சிவாஜி....

என்ன எல்லோரும் அதிசயமா பாக்கிறிங்களா ? ஆமாங்க உங்க முன்னாடி நடிகர் சிவாஜி வந்தா எப்படி இருக்கும் . ஜீன்ஸ் படத்தில் "கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா " என்ற பாடலில் ஜஸ்வர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதற்கு ராஜு சுந்தரம் அமெரிக்காவிலிந்து கொண்டு வந்த புரெஜக்ற்ரர் மூலம் இன்னுமொரு ஜஸ்வர்யாவை உருவாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவார். ஆம் அங்கு ராஜு சுந்தரம் பயன்படுத்திய தொழில் நுட்பம் முப்பரிமாணத் [3D] தொழில்நுட்பமாகும்.
இனி
நாம் விடயத்திற்க வருவோம். திரை ( screen) இல்லாம எமக்கு முன் ஒரு படம் பார்க்க முடியுமா ? ஆம் திரையே இல்லாமல் நாம் படம் பார்க்க முடியும். சரி நாம் முப்பரிமான காட்சி ஒன்றை எவ்வாறு காண்கிண்றேம். ஒரு படத்தை (photo)எடுத்துக்கொண்டால் அவ் படத்தை பல மில்லியன் புள்ளிகளாக உடைக்கப்பட்டு அவ் புள்ளிகளுக்கான ஒளிக்கீற்றை திரையில் அவ் அவ் இடங்களில் விழச்செய்யப்படுகின்றது. இவ்வாறு விழும் ஒளிக்கற்றை புள்ளிகளாக உருவாக்கப்படும். இவ்வாறு தோன்றும் பல புள்ளிகள் திரையில் படத்தை தோற்றுவிக்கின்றது. ஆனால் திரை இல்லாமல் எவ்வாறு படத்தை தோற்றுவிக்க முடியும்? ஒரு பக்கத்திலிருந்து ஒளிக்கீற்றை பாய்ச்சி அடிக்காமல், சுற்றி வர எல்லாப் பக்கத்திலிருந்தும் ஒளிக்கீற்றைப் பாய்ச்சி அடித்தால் ? எவ்வாறு எனில் ஒரு வட்டமாக ஒளிக்கீற்று பாய்ச்சிகளைப் (projector) பொருத்த வேண்டும். நடுவில் பிம்பம் தெரிய வைக்கமுடியும். இது ஒரு முப்பரிமாண பிம்பத்தை உருவாக்கும். அதாவது எங்கே படம் உருவாக வேண்டுமோ அதை நோக்கி இந்த ஒளிக்கீற்று பாய்ச்சிகளை பாய்ச்ச வேண்டும். இவ்வாறு இரண்டு
மூன்று ஒளிக்கீற்றுகள் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது அதில் ஒரு புள்ளி உருவாகும். இவ்வாறு பல புள்ளிகளை தோன்ற வைத்து ஒரு படத்தை உருவாக்கலாம். சரி இவ் ஒளிக்கீற்று ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வேறு ஒரு ஒளிக்கீற்றை சந்தித்தால் விழைவு ???.... தெளிவற்ற படங்கள். இதை தவிர்க்க இவ் ஒளிக்கீற்றுகளை மூண்று தள ஒளிக்கீற்றாக அதாவது X, Y மற்றும் Z என்று மூன்று விதமான ஒளிக்கீற்றுகளை உருவாக்கலாம். இந்த மூன்று வித்தியாசமான விஞ்ஞான பூர்வமான ஒளிக்கீற்றுகள் ஒன்றோடொன்று சந்திக்கும்போது ஏதாவது விஞ்ஞான மாற்றம் ஏற்பட்டோ அல்லது ஏற்படாமலோ புள்ளிகள் உருவாக வைக்கமுடியும். இதன் மூலம் தவறுதலாக புள்ளிகள் உருவாகுவதைத் தவிர்க்கலாம். இது ஒரு முற்று முளுதான தீர்வு அல்ல. ஏனெனில் இவ் X, Y மற்றும் Z என்று மூன்று விதமான ஒளிக்கீற்றுகள் புள்ளியை உருவாக்கியவுடன் மறையப் போவது இல்லை. அவை முடிவற்ற பயனத்தில் இருப்பவை. எனவே அவை புள்ளியை உருவாக்கியவுடன் அவை அழிந்து போகக்கூடியவாறு உருவாக்கப்படல் அவசியமாகும்.
உதா
ரணமாக..
இவ்வாறு உருவாக்கப்பட்டால் மக்கள் எந்தப்பக்கத்திலிருந்தும் படங்களை பார்க்க முடியும். இனி என்ன வருங்கலத்தில் உங்க முன்னால் சிவாஜி வந்து கை கொடுத்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை.

Thursday, June 11, 2009

திசைமாறும் உலகம்

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் தனது பயனத்தின் போது தனது திசைகாட்டி ஒரு சமயம் செயலிழந்ததை உணர்ந்தார். ஆம் பொர்முடா தீவகற்பத்தை அண்மித்த போது அவர் செயலிழந்ததை உணர்ந்தார். இதற்கு காரணம் அங்கு ஏற்பட்ட காந்த குழப்பமே ஆகும்.



அங்கு இன்னுமொரு காந்த விழைவு குறுக்கிட்டதே காரணம் ஆகும். இப் பூமிப்பந்தில் பறவைகளும் மிருகங்களும் தமது பயனத்திசையை வழி நடத்தும் கருவியாக அமைப்பது பூமியின் காந்தத் தளத்தை ஆகும். பரிதிப் புயல்கள் ஏற்படும் சமயத்தில் கவசம் போன்று பாதுகாப்பது இவ் காந்தத்தளம் ஆகும். காந்தத்தளம் இல்லை எனில் பரிதிப்புயல் வலிமையாக தொழில்படும் சந்தர்ப்பத்தில் பூமியில் உள்ள அனைத்து தொடர்பாடல் சாதனங்களும் தமது தொழில்பாட்டை இழக்கும். இப் பூமிப்பந்தில் நிலைமானது எதுவும் இல்லை என்பது போலவே பூமியின்டதென்
காந்தத் துருவங்கள் எப்போதும் ஒரே திசை நோக்கி இருப்பவை அல்ல ! அவை சிறுகச் சிறுக கோணம் மாறி பல்லாயிரம் ஆண்டுகள் படிப்படியாக நகர்ந்து பிறகு வடதுருவம் தென் துருவமாகவும், தென் துருவம் வடதுருவமாகவும் மாறிவிடுகின்றன !பிராடு ஸிங்கரும் மேற்கு ஜெர்மனியில் ஆய்வு செய்யும் கென்னத் ஹா·ப்மனும் (Kenneth Hoffman) சேர்ந்து ஹவாயிக்கு அருகில் தாஹிதியின் (Tahiti) பூர்வீக எரிமலைக் குழம்பை 30 ஆண்டுகளாகச் சோதனை செய்து பூமியின் காந்த முனைத் திருப்பின் வழிமுறைகளைக் (Patterns) கண்டறிந்தனர். வெப்பக் கனலில் திரவமான இரும்பு செழிப்பான உலோகங்களின் காந்த சக்தி திரவம் குளிர்ந்து திடமாகிக் கடினமானதும் உட்கருவில் அடைபட்டு விடுகிறது ! “பூமியின் காந்த தளத்தின் மீது எரிமலைக் குழம்பு குளிர்ந்து படிந்ததும் அப்போதுள்ள புதிய காந்த தளத்தின் பதிவு நினைவு பற்றிக் கொள்கிறது. அவ்விதம் உண்டான எரிமலைக் குழம்பின் நினைவை அழிப்பது மிகக் கடினம். அதுவே பூகாந்தத்தின் பூர்வத் திசை அமைப்பின் (Paleomagnetic Direction) பதிவாகி விடுகிறது.” என்று பிராடு ஸிங்கர் கூறுகிறார் பூகோளத்தின் துருவங்கள் கடந்த 65 மில்லியன் ஆண்டுகளாக 130 தடவைகள் மாறி வந்துள்ளன என்று பூதளவியல் விஞ்ஞானிகள் (Geologists) கணித்துள்ளார்கள் ! அதாவது சராசரி அரை மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுத் துருவ மாற்றம் நேர்ந்திருக்கிறது ! பூமியில் முதன்முதல் பாறைகள் உருவான போது அவை யாவும் அதிசயிக்கும் வகையில் அப்போதையப்பூகாந்தத் திசை அமைப்பைப் (Orientation of Earth’s Magnetic Field) பதிவு செய்துள்ளன. பூதளவியல் விஞ்ஞானிகள் பல்வேறு யுகத்தில் பல்வேறு இடங்களில் உண்டான பாறை மாதிரிகளைச் சேகரித்து அவ்விதத் துருவ மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதைக் காட்டியிருப்பது ஆச்சரியமாக உள்ளது ! பூமியில் இப்போதிருக்கும் வடதென் துருவத் திசை அமைப்பு “நேர் அமைப்பு” (Normal Direction) என்றும் அதற்கு எதிரான திசை அமைப்பு “திருப்ப அமைப்பு” (Reversal Direction) என்றும் விஞ்ஞானிகளால் குறிப்பிடப் படுகின்றன ! கடந்த 150 ஆண்டுகளாக (1985 Factual) பூகாந்தத் திசைக் கோணம் ஒரே மட்டக் கோட்டில் (Lattitude) (79 டிகிரி) இருந்திருக்கிறது ! அதே சமயத்தில் அதன் நேரியல் கோடு (Longitude) ஆண்டுக்கு 0. 042 டிகிரி கோண வீதத்தில் மாறி வந்துள்ளது ! மேலும் இதற்கு முன்பு பூகாந்தத் துருவத் திசை நீடிப்புக் குறைந்தது 2.6 பில்லியன் ஆண்டுகள் கூட இருந்துள்ளது என்று அறிப் படுகின்றது.

மீண்டும்......................

2004 டிசம்பர் 26 ஆம் தேதி தென்னாசியக் கடற்கரையில் படையெடுத்த அசுரச் சுனாமியை எழச் செய்த கடற் பூகம்பம் எவ்விதம் உண்டானது என்பதற்குப் பூமி அடித்தட்டின் (Earth’s Tectonic Plate Crust) நிலையற்ற தன்மையே என்று ஊகிக்கப் படுகிறது. அத்தகைய நிலையற்ற கொந்தளிப்புக்குப் பூகாந்தத் திசை மாற்ற நகர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. சூரியன் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறைத் தவறாது அதன் “பரிதித் தழும்பு மீட்சி” உச்சத்தில் (Peak Sunspot Cycle) தனது துருவத் திசையை மாற்றுகிறது ! அவ்விதப் “பரிதித் துருவத் திருப்பம்” அடுத்து 2012 ஆம் ஆண்டில் நேரப் போகிறது ! தென்திசை நோக்கிய காந்தத் திரட்சி (Magnetic Flux) மைய ரேகையில் (Solar Equator) செழித்த பரிதித் தழும்புகளிலிருந்து நகர்ந்து வடப்புறம் திரும்புகிறது. ஆனால் பூமியின் துருவ மாற்றம் பரிதியில் நேர்வது போல் ஒரு சில குறுகிய ஆண்டுகளில் நிகழ்வதில்லை 2012 டிசம்பர் 21 ஆம் தேதியை ஒரு பயங்கர தினமாக விஞ்ஞானிகள் மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறார் ! சூரியனில் 11 ஆண்டுகள் கடந்து மீண்டும் வரும் துருவ முனை மாற்றுச் சுற்றியக்கத்தில் வடதென் துருவங்கள் மாற்றம் அடையப் போகின்றன ! பரிதியில் இப்படித் திடீரென்று துருவ நகர்ச்சியும், மாற்றமும் ஏற்படுவது இயற்கை ! அவ்விதத் துருவ மாற்றங்கள் பரிதியின் காந்தத் தளங்களில் நேரிடும் “சீரமைப்பு மீளியக்கங்கள்” (Harmonic Cycles). துருவ முனைத் திருப்பங்கள் “சூரிய வடுக்கள் அல்லது தழும்புகள்” (Sun Spots or Sun Acnes) காரணமாக இருப்பதால் நிகழ்கின்றன. அல்லது பரிதியின் காந்த சக்தியால் நேரிடுகின்றன.